தைத்திருநாளன்று ஹங்குராங்கெத்தையில் தீக்கிரையான வீடுகள் – பெரும் சோகத்தில் மக்கள்
ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் (Rookwood) கொலம்பியா தோட்டத்தில் இன்று (15) மதியம் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக 10 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
இதனால் வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.
தைப்பொங்கல் பண்டிகையை இன்று சிறப்பாகக் கொண்டாடி வந்த மக்களின் வீடுகளே தீக்கிரையாகியதால் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பிரதேச பொதுமக்கள் ஒன்றிணைந்து கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்குராங்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





