மத்திய கிழக்கு

ஹமாஸ் பயங்கரவாத முகாம்களாக பயன்படுத்தப்பட மருத்துவமனைகள் … வீடியோ ஆதாரம் வெளியிட்டது இஸ்ரேல்!

காசாவில் மருத்துவமனைகள் என்ற பெயரில் அவற்றின் கீழே சுரங்கங்கள் அமைத்து ஹமாஸ் பயங்கரவாத முகாமாக பயன்படுத்தி வந்ததாக இஸ்ரேல் வீடியோ வெளியிட்டு மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.

ஹமாஸுக்கு எதிரான போர் பிரகடனத்தை வெளியிட்டதிலிருந்து எதிர்தாக்குதல் திட்டமிடலுக்காக காசாவில் உள்ள மருத்துவமனைகளை ஹமாஸ் பயன்படுத்தி வருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது இஸ்ரேல். காசாவின் அல் ஷிபா மருத்துவமனையின் பரந்து விரிந்த அடிப்பரப்பில் சுரங்கம், பதுங்கு குழிகளில் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டு மையத்தை அமைத்திருந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசியிருக்கும் இஸ்ரேல் ராணுவப் படை (IDF) செய்தி தொடர்பாளர் அட்மிரல் டேனியல் ஹக்காரி, “காசா மருத்துவமனை பயங்கரவாத முகாமாக பயன்படுத்தப்பட்டது. ஹமாஸ் தனது நோக்கத்தை நிறைவேற்றி கொள்வதற்காக மருத்துவமனைகளை கேடயமாக பயன்படுத்துகிறது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் தான் போர். காசாவில் உள்ள மக்களுடன் அல்ல. அந்நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு அடியில் ஹமாஸ் சுரங்கங்களை அமைத்து, தாக்குதல் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது” என தெரிவித்துள்ளார்.

See also  ஹிஸ்புல்லாஹ் தலைவரின் படுகொலையை தொடர்ந்து மத்திய கிழக்கில் மேலும் உக்கிரமடையும் பதற்றம்!

தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையின் அடிப்பகுதியில் ஹமாஸ் நிறுவியிருந்த சுரங்கம் குறித்த வீடியோ காட்சிகளை இஸ்ரேல் நேற்று வெளியிட்டது. இந்த வீடியோ காட்சிகள் வெளிநாட்டு செய்தியாளர்கள் வசமும் வழங்கப்பட்டது. அந்த வீடியோவில் கற்களைக் கொண்டு 150 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள சுரங்கத்தின் முடிவில் குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் குளிர்சாதன வசதி, சமயலறை, குளியலறை, ஸ்டீல் கட்டில் ஆகியவை உள்ளன.

மருத்துவமனையை பயங்கரவாத தாக்குதல் திட்டத்துக்கான கேடயமாக ஹமாஸ் பயன்படுத்தி வருவதை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் என இஸ்ரேல் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content