உலகம்

அமெரிக்காவில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் : அதிகரிக்கும் மரணங்கள்!

அமெரிக்காவில் காய்ச்சல் காரணமாக இதுவரை 09 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓஹியோ (Ohio) மற்றும் கென்டக்கி (Kentucky) மாநிலங்களில் முதல் குழந்தை இறப்புகள் பதிவாகியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கென்டக்கியில்  (Kentucky)  இறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு மாநிலங்களிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் காய்ச்சல் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த பருவத்தில் நாடு முழுவதும் 7.5 மில்லியன் காய்ச்சல் தொற்றாளர்கள் 81,000 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.  அத்துடன் 3,100 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

டிசம்பர் 13 முதல் 20 வரை காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9,944 இலிருந்து 19,053 ஆக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நியூயார்க் (New York) மற்றும் கொலராடோவில் (Colorado) அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!