ஆசியா

சீனாவில் வைத்தியசாலையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் : 10 பேர் பலி!

தென்மேற்கு சீனாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் உள்ள Zhenxiong கவுண்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தாக்குதலின் தன்மை குறித்து சீனாவின் அரச ஊடகம் விவரிக்கவில்லை. ஆனாலும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் மருத்துவமனை வளாகத்திற்குள் நபர் ஒருவர் கத்தியுடன் இருப்பதைக் காட்டுகின்றன.

தாக்குதலின் தன்மை மற்றும் அதன் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து அதிகாரிகள் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இத்தகைய சம்பவங்கள் சீனாவில் அரிதாகவே இடம்பெறுகின்றன. இதேவேளை சீனாவில் குடிமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடுமையான சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.

இந்நிலையில் கத்தி குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!