வட அமெரிக்கா

கனடாவின் கல்கரியில் இடம்பெற்ற கோர சம்பவம் – மூவர் உடல் கருகி பலி!

கனடாவின் கல்கரியின் க்ரோபூட் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.சிறிய கூடாரமொன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

தீ விபத்தில் சிக்கியவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.குளிர் காரணமாக அடைக்கலம் பெற்றிருந்தவர்களே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மரணங்கள் சந்தேகத்திற்கு இடமானவை அல்ல என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.இந்த சம்பவத்தில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்து குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!