இலங்கை

இலங்கையில் கோர விபத்து – இந்தியர் பலி – பலர் படுகாயம்

பொலன்னறுவை, ஜயந்திபுர பிரதேசத்தில்இடம்பெற்ற விபத்தில் இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு பொலன்னறுவையிலிருந்து மின்னேரியா நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது வேனில் பயணித்த இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் சாரதி உட்பட ஏழு பேர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தக நடவடிக்கைளுக்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த வர்த்தகர்கள் சிலரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் இன்று (07) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content