ஆசியா

அரசு ஊழியர்கள் பணியிடத்தில் WhatsApp,WeChat மற்றும் Google Drive பயன்படுத்த தடை விதித்துள்ள ஹாங்காங்

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அரசு கணினிகளில் WhatsApp,WeChat மற்றும் Google Drive போன்றவற்றை ஊழியர்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது ஹாங்காங் அரசு.

அரசின் இந்தத் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு வழிகாட்டுதலின் டிஜிட்டல் கொள்கையால் ஊழியர்கள் பெரிய அளவில் சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவித்தனர். இருப்பினும் WhatsApp,WeChat மற்றும் Google Drive போன்ற சேவைகளை ஊழியர்கள் தங்களது சொந்த சாதனத்தில் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தடையில் இருந்து விலக்கு வேண்டும் என கோருபவர்கள் உயர் அதிகாரியின் அனுமதியைப் பெற்று பயன்படுத்தலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் செக்யூரிட்டி பாதுகாப்பு மற்றும் தகவல் கசிவு போன்ற காரணங்களால் உலக அளவில் தனியார் நிறுவனங்கள் கூட இதே மாதிரியான நடவடிக்கையை கையாண்டு வருவதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஹேக்கிங் விவகாரம் உலக அளவில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. குறிப்பிட்ட தளங்களின் பயன்பாட்டை அரசு எந்திரங்களில் பயன்படுத்த அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் தடை விதித்துள்ளன. இது தகவல் கசிவினை தடுக்கும். அரசு ஊழியர்களிடம் போதுமான சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாததும், முறையான கண்காணிப்பு அமைப்புகள் இல்லாததும் இதற்கு காரணம் என டெக் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

See also  வடக்கு காசாவில் 17 நாட்களில் 640 பாலஸ்தீனியர்கள் மரணம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹாங்காங் அரசின் பல துறைகளின் வசம் இருந்து லட்சக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தரவு சார்ந்த விவரங்கள் கசிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் அந்த அரசு WhatsApp,WeChat மற்றும் Google Drive போன்றவற்றை அரசு கணினிகளில் பயன்படுத்த தற்போது தடை விதித்துள்ளது.

(Visited 3 times, 3 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content