இலங்கை செய்தி

புனித நோன்புப் பெருநாள் இன்று! இலங்கையில் விசேட பாதுகாப்பு

இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் இன்றைய தினம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைபிறை தென்பட்டுள்ளமையினால் இன்றைய தினம் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய பள்ளவாசலில் நேற்று கூடிய பிறைக்குழு ஏகமனதாக தீர்மானித்தது.

ஹிஜ்ரி 1445 புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைபிறை பார்க்கும் மாநாடு மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசல் மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் றஷீன் தலைமையில் இந்த மாநாடு இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் பல பாகங்களிலும் ஷவ்வால் மாதத்துக்கான தலைபிறை தென்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்ததை அடுத்து இலங்கை வாழ் இஸ்லாமியர்களை இன்றைய தினம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழுத் தலைவர் கலீபதுல் குலபா மௌலவி எம்.பி.எம் ஹிஷாம் பத்தாகி அறிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் அங்கத்தவர்கள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், இஸ்லாமிய சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள், சகல பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஷாவியாக்களின் பிரதிநிதிகள், மேமன் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!