May 15, 2025
Follow Us
ஐரோப்பா

விடுமுறை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து – பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

பிரான்ஸில் விடுமுறை விடுதியொன்றில் ஏற்பட்ட பாரிய தீயினால் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என அஞ்சப்படுகிறது.

ஜேர்மன் எல்லையிலிருந்து 70 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வின்ட்ஸென்ஹெய்ம் நகரில் இன்று (9) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த விடுதிப் பகுதியே தீப்பற்றியுள்ளது.சம்பவத்தில் 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் காணாமல் போனவர்களும் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தீ தற்போது அணைக்கப்பட்டு விட்ட நிலையில் தீ பரவியமைக்கான காரணம் வெளியாகவில்லை.

(Visited 17 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்