வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றுச் சாதனை – ஜனாதிபதியின் செலவுகள் குறித்த குற்றச்சாட்டு
நாட்டின் வரலாற்றில் ஒரு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட அதிகபட்ச நிதி, இந்த முறை ஜனாதிபதியின் செலவினத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேற்று தொடங்கிய 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதத்தில் அவர் கலந்துகொண்டு பேசினார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை டிசம்பர் 15ஆம் திகதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் அதை அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
முன்னதாக, ஜனவரி 29ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், தொடர்புடைய நடவடிக்கைகள் நேற்றைய திகதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.





