ஆசியா

ஜப்பானில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் – மூவர் பலி!

தென்மேற்கு ஜப்பானில் ஒரு மருத்துவ போக்குவரத்து ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் நோயாளி உள்பட மேலும் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விமானி ஹிரோஷி ஹமாடா (66), ஹெலிகாப்டர் மெக்கானிக் கசுடோ யோஷிடகே (Kazuto Yoshitake) மற்றும் 28 வயது செவிலியர் சகுரா குனிடகே (Sakura Kunitake) ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் உடல்கள்  ஜப்பான் விமான சுய பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டன.

மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடலோர காவல்படை இரண்டு விமானங்களையும் மூன்று கப்பல்களையும் அந்தப் பகுதிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

விபத்துக்கான காரணங்களை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!