ஆசியா

ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவு – பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஜப்பானில் கடலை ஒட்டிய மலைப்பகுதிகளில் ஏற்படும் கடும் பனிப்பொழிவால் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று காலை நிலவரப்படி Aomori மாநிலத்தில் உள்ள Hakkoda மலைப்பகுதியில் 390 செண்டிமீட்டருக்கும் அதிகமாகப் பனி படிந்தது.

ஆண்டுதோறும் இந்தக் காலக்கட்டத்தில் வழக்கமாகப் பெய்யும் பனியைவிட அது ஒரு மடங்கு அதிகம். Niigata மாநிலத்தின் Itoigawa நகரிலும் வழக்கத்தைவிட அதிக அளவில் பனி கொட்டியது.

மலைப்பகுதிகளில் பனிச்சரிவை எதிர்கொள்ள மக்கள் ஆயத்தமாக இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்தனர்.

மின் கம்பங்கள், மரங்கள் ஆகியவற்றில் அளவுக்கு அதிகமாகக் குவியும் பனியால் மின்சார விநியோகம் துண்டிக்கப்படக்கூடும் என்று அவர்கள் கூறினர்.

Hokkaido, Tohoku ஆகிய வட்டாரங்களில் இன்று வரை கடுங்குளிர் நீடிக்கும் என்று ஜப்பானின் வானிலை ஆய்வகம் எச்சரித்தது.

(Visited 40 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!