ஆசியா

மியன்மாரில் கனமழை : 10 ஆயிரம் பேர் இடம்பெயர்வு!

மியான்மரின் தெற்குப் பகுதிகளில் பெய்த கனமழையால் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஏறக்குறை 10 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

அத்துடன் நாட்டின் மிகப் பெரிய ரயில் போக்குவரத்து தடை பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நலன், நிவாரணம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சகத்தின் மூத்த அதிகாரி லே ஷ்வே ஜின் ஓ, பாகோ பகுதியில் கடந்த வாரம் தொடங்கிய தொடர் மழையால் அதன் தலைநகரான பாகோ டவுன்ஷிப்பின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதாகவும், இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்றும் கூறினார்.

மியன்மாரில் கடந்த 59 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்