இலங்கை

இலங்கையில் பொதுத் தேர்தலை நடத்துமாறு ரணிலுக்கு கடும் அழுத்தம்!

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர்பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமும் அவர் வலியுறுத்தியுள்ளார். என்றாலும், பொதுத் தேர்தலை முதலில் நடத்தும் நிலைப்பாட்டில் ரணில் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கூறியுள்ளார்.

ஆனால், பொதுத் தேர்தலை முதலில் நடத்தும் தீர்மானத்தில் இருந்து பின்வாங்க போவதில்லையென பசில் ராஜபக்ச கட்சியின் முக்கியஸ்தர்களிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த நிலையில், படுதோல்வியை தவிர்ப்பதற்காகவே முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்துமாறு பஸில் ராஜபக்ச கோருகின்றார்.

ஆனால், எந்த தேர்தல் நடந்தாலும் பொதுஜன பெரமுனவால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என பிவிருது ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில தெரிவித்தார்.

“மொட்டு கட்சிக்கு ஆதரவு உள்ளது. மக்கள் உள்ளனர் என்றெல்லாம் அக்கட்சியினர் மாயையை உருவாக்கிவருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வி ஏற்படும் என்பது பசிலுக்கு தெரியும். எனவே, ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்பட்டால் நாடாளுமன்ற தேர்தலுக்கு வேலை செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள்.

அதனால் மொட்டு தரப்பினரும் மேலும் பின்னடைவு ஏற்படும். இதனாலேயே நாடாளுமன்றத்தில் சில ஆசனங்களை தக்கவைத்துக்கொள்ள முன்கூட்டியே பொதுத்தேர்தல் கோரப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content