ஐரோப்பாவை உலுக்கும் வெப்பம் – விமானத்தில் மக்கள் மயக்கமடைந்ததால் பதற்றம்
ஐரோப்பாவை உலுக்கும் வெப்பம் – விமானத்தில் மக்கள் மயக்கமடைந்ததால் பதற்றம
ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் உலுக்கி வரும் நிலையில் மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் விமானத்தில் மயக்கமடைந்துள்ளனர்.
ஸ்பெயினின் மலாகாவிலிருந்து இத்தாலியின் மிலனுக்குச் சென்று கொண்டிருந்த ரியானேர் விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விமானம் ஏசி இல்லாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக 42 டிகிரி செல்சியஸ் வெப்பத்தின் மத்தியில் இருந்துள்ளது.
வெப்ப நிலை அதிகரித்ததன் காரணமாக விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் மயக்கமடைந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
பிறகு அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறு வலியுறுத்தினர்.
விமானம் தரையிறங்கியதும் மருத்துவ குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து அனைவருக்கும் சிகிச்சை அளித்தனர்.