ஆசியா

சீனாவை உலுக்கும் வெப்பம் – புதிய உச்சத்தை எட்டிய காலநிலை

சீனாவில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட வெப்பத்தால் மக்கள் கடும் நெருக்கடி நிலையில் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசியாவின் பல பகுதிகளிலும் மக்கள் கோடை வெப்பத்தால் கடுமையாக அவதிப்படுகின்றனர். அதற்கமைய, சீனாவில் நாடு முழுதும் வெப்ப நிலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

Shandong மாநிலத்திலும் பெயச்சிங்கிலும் அனல் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பெய்ச்சிங்கில் வெப்பம் 36 டிகிரி செல்சியஸைத் தொடக்கூடும். Jinan, Tianjin, Zhenzhou முதலிய வட்டாரங்களிலும் அதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பத்தைச் சமாளிக்க மில்லியன் கணக்கான வீடுகளில் குளிர்சாதன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே மின்சார விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

வறட்சியால் பயிர்களுக்குப் பாதிப்பு. விளைச்சல் குறைந்து உணவுப் பொருள்களின் விலை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!