இலங்கை – கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை பெலியத்த பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், நீதிபதி மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அளுத்கம எண் 5 கூடுதல் நீதிபதி பவித்ரா சஞ்சீவனி, அவரை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
(Visited 51 times, 1 visits today)