இலங்கை

இன்று முடங்கும் வடக்கு – கிழக்கு! வீதிகளில் படையினர் குவிப்பு

இலங்கை அரசாங்கம் முன்வைக்கவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக ஹர்த்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுமையாக முடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே வடகிழக்கின் அனைத்து நகரங்கள்,சந்திகள் மற்றும் வீதிகள் எங்கும் வழமைக்கு மாறாக பெருமளவு படையினர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படாது என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும், இன்றைய தினம் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு, பூரண ஆதரவு வழங்கியுள்ளது.

ஜனநாயக ரீதியாக போராடுகின்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றார்கள். அந்த வகையிலே புதிதாக உருமாறி வரவிருக்கின்ற சட்டமூலத்தை சர்வதேசம் தலையிட்டு நிறுத்த வேண்டும்.

இலங்கை நாடாளுமன்றத்திலே இந்த சட்டமூலமானது ஒரு நியாயப்படுத்தப்பட்ட சட்டம் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்ககூடாது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முற்றாக எதிர்கின்றது. தொடர்சியாக இவ் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீதான நகர்வுகள் அதனை நடைமுறைபடுத்த முன்னெடுக்கப்படுமானால் வடகிழக்கு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக மாணவர்களாக முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content