ஆசியா

தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் பே ஹியூன்-ஜின் மீது கடும் தாக்குதல் : சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்

தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் பே ஹியூன்-ஜின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆளும் மக்கள் சக்தி கட்சியின் தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினரான பே ஹியூன்-ஜின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு, நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் பே ஹியூன்-ஜின் தரப்பிலிருந்தும், இவரது கட்சி தரப்பிலிருந்தும் உடனடியாக பதில் எதுவும் வழங்கப்படவில்லை.

இதேவேளை, தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங் ஜனவரி தொடக்கத்தில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு மேல் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content