இலங்கை

யாழ். இந்து கல்லூரியில் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டம்

பாடசாலை நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

 

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் உயரதிகாரிகள் பாடசாலை மாணவ மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஓவியம் வரைவது தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சிப் பட்டறை நடாத்தப்பட்டு, ஓவியம் வரைவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

பாடசாலைகளின் நூலகத்தினை அபிவிருத்தி செய்வதுடன், கலை இலக்கிய மொழிப்புலமையினையும் மேம்படுத்தும் நோக்கில் அமைச்சினால் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!