இலங்கை செய்தி

இலங்கையில் சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கையில் சில வினாக்களுக்கு இலவசப் புள்ளிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாள்களுக்கு இந்த புள்ளிகள் வழங்கப்படவுள்ளது.

குறித்த வினாத்தாளின் சில பல்தேர்வு வினாக்களில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குளறுபடிகள் காணப்படும் வினாக்களுக்கு மாத்திரம் இவ்வாறு இலவசப் புள்ளிகள் வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளில் சிக்கல் நிலை காணப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வௌியாகியிருந்தன.

விஞ்ஞானப் பாடத்திற்கான வினாத்தாளில் காணப்படும் சில வினாக்கள் கட்டாய கற்றலுக்கான உள்ளடக்கங்களுக்கு அப்பால் காணப்படும் விடயங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சில இலவசப் புள்ளிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content