அமெரிக்காவில் குஜராத் பெண் ஒருவர் 21 வயது இளைஞரால் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் குஜராத்தி பெண் ஒருவரை கொன்ற குற்றச்சாட்டில் 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
49 வயது இந்திய வம்சாவளி பெண்ணான கிரண் பட்டேல் தென் கரோலினா பகுதியில் பெட்ரோல் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 16ம் திகதி பெட்ரோல் நிறுவனத்திற்கு கொள்ளையடிக்கும் நோக்கில் வாலிபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார்.
அப்போது சுய பாதுகாப்பிற்காக அந்த வாலிபர் மீது ஒரு பாட்டிலை வீசி விட்டு கிரண் படேல் தப்பி ஓட முயன்ற போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பின்னர் பொலிசாரின் தீவிர தேடுதல் நடவடிக்கைக்கு பிறகு குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)