ஸ்பெயினில் அதிகரித்து வரும் வீட்டு பிரச்சினை : விமான நிலையத்தை தங்குமிடமாக மாற்றிய மக்கள்!

ஸ்பெயினில் வீடற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் பலர் விமான நிலையத்தில் உறங்குவதை சர்வதேச ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.
மாட்ரிட்டின் சர்வதேச விமான நிலையத்தின் 4வது முனையத்தில் வீடற்ற பலர் தற்காலிக தங்குமிடமாக பயன்படுத்தி வருதை காணக்கூடியதாக உள்ளது.
நாட்டின் தலைநகரான மாட்ரிட் மற்றும் பார்சிலோனா போன்ற நகரங்களில் வாடகை செலவுகள் குறிப்பாக வேகமாக உயர்ந்துள்ளன.
பல மாதங்களாக, அதிகாரிகள் தங்களுக்கு வேறு வாழ்க்கை ஏற்பாடுகளைக் கண்டுபிடிக்க உதவவில்லை அல்லது தரையில் விரிக்கப்பட்ட தூக்கப் பைகள் மற்றும் போர்வைகள், ஷாப்பிங் வண்டிகள் மற்றும் பைகளுடன் அவர்கள் ஆக்கிரமித்துள்ள விமான நிலையத்தின் மூலைகளிலிருந்து அவர்களை வெளியேற்றவில்லை என அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயினின் தேசிய அரசாங்கத்திடம் பொறுப்பேற்று விமான நிலையத்தில் தூங்கும் ஒவ்வொரு வீடற்ற நபருக்கும் மறுவாழ்வு அளிக்க ஒரு திட்டத்தை கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.