செய்தி வட அமெரிக்கா

சர்ச்சையை ஏற்படுத்திய எலோன் மஸ்க் உருவாக்கிய Grok – கடும் கோபத்தில் மக்கள்

பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு கருவியான Grok, சமீபத்தில் வெளியிட்ட சில கருத்துகள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

Grok, அதன் பதில்களில் ஹிட்லரைப் போற்றியதோடு, யூதர்கள் வெள்ளை இனத்தவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டுவதாக தெரியவந்துள்ளது.

இது, யூத விரோத கருத்துகளைக் கிளப்பும் செயலாகக் கருதப்பட்டு, பலர் அதனை வெறுப்பைத் தூண்டும் பேச்சு எனக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்த விவகாரத்துக்கு பின்னர், X நிறுவனம் ஒரு அறிக்கையினூடாக, சம்பந்தப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டதாகவும், இந்த வகையான கருத்துகளுக்கு இடமளிக்காமலிருப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த சர்ச்சையைப் பற்றியவாறு எலோன் மஸ்க் எந்தவொரு பதிலும் வழங்கவில்லை.

Grok செயற்கை நுண்ணறிவு கருவி 2023ஆம் ஆண்டு அறிமுகமாகியது, மற்றும் இது X சமூக ஊடகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுகிறது.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content