இஸ்ரேலில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின் பாரிஸ் வந்த கிரேட்டா துன்பெர்க்

இஸ்ரேலில் இருந்து நாடு கடத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, கிரேட்டா துன்பெர்க், சர்வதேச கடல் பகுதியில் தன்னையும் தனது சக ஆர்வலர்களையும் கடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தான் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்ததாகக் கூறும் ஆவணத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரிஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்வலர், திங்களன்று இஸ்ரேலால் தடுத்து நிறுத்தப்பட்ட காசா செல்லும் கப்பலில் தானும் மற்றவர்களும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மிகவும் தேவையான உதவிகளை கொண்டு வர முயற்சித்ததாக வலியுறுத்தினார்.
“நாங்கள் 12 அமைதியான தன்னார்வலர்கள், சர்வதேச கடல் பகுதியில் மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் ஒரு சிவிலியன் கப்பலில் பயணம் செய்தோம்,” என்று துன்பெர்க் தெரிவித்துள்ளார்
இங்கிலாந்து கொடியுடன் கூடிய மேட்லீன் கப்பல் திங்களன்று காசா கடற்கரையிலிருந்து சுமார் 125 மைல் (200 கி.மீ) தொலைவில் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக பயணத்தை ஏற்பாடு செய்த ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணி தெரிவித்துள்ளது.