ஐரோப்பா

பாட்டியை கவனித்துக்கொள்வது கஷ்டமாக இருந்ததால் பேரன் செய்த செயல் !

ஜேர்மனியில், 100 வயதான தனது பாட்டியை கோடரியால் வெட்டிக் கொலை செய்த ஜேர்மானியர் மீதான வழக்கு விசாரணை துவங்கியுள்ளது.

Hamburg நகரில் வாழ்ந்து வந்த தனது 100 வயது பாட்டியை கவனித்துவந்துள்ளார் அந்த 37 வயது நபர். ஆனால், அவருக்கு பாட்டியை கவனித்துக்கொள்வது மிகவும் கஷ்டமாக இருந்துள்ளது.தன்னால் சமாளிக்க முடியாத நிலை ஏற்படவே, அவர் தனது பாட்டியை கோடரியால் தாக்கிக் கொலை செய்துள்ளார். மார்ச் மாதம் 6ஆம் திகதி, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மறதி பிரச்சினையால் அவதியுற்ற அந்த 100 வயது மூதாட்டி சக்கர நாற்காலி உதவியுடனே நடமாடிவந்துள்ளார்.திடீரென தனது பேரன் தன்னைத் தாக்க, தடுக்க முயன்ற அந்த மூதாட்டி சக்கர நாற்காலியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.தலையிலும் கழுத்திலும் 16 வெட்டுக்கள் விழ, அவரது தோல் எலும்பு முறிந்ததுடன், முதுகெலும்பிலும் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் அவர்.

ஜேர்மனியில் 100 வயது பாட்டியை கவனித்துக்கொள்வது கஷ்டமாக இருந்ததால் பேரன் செய்த செயல் | Killing 100 Year Old Grandma Germany

தன் பாட்டியைக் கொன்றுவிட்டு பொலிஸாரை அழைத்து நடந்ததைக் கூறியுள்ளார் அந்த மூதாட்டியின் பேரன். பொலிஸார் அவரைக் கைது செய்ய, எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அவர்களுடன் சென்றுள்ளார் அவர்.இந்த வழக்கு, ஜேர்மனியிலுள்ள Hamburg நகரில் வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content