இலங்கை செய்தி

தைப்பொங்கலை வட மாகாணத்தின் ‘முதன்மைப் பெருவிழாவாக’ மாற்றத் திட்டம்: மன்னாரில் ஆளுநர் அறிவிப்பு

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாணப் பொங்கல் விழா – 2026’ வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வரம் திருக்கோவில் முன்றலில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பாரம்பரிய ‘புதிரெடுத்தல்’ மற்றும் பொங்கலிடும் நிகழ்வுகளைத் தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அங்கு உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் கல்வி, சுற்றுலா மற்றும் விவசாய அமைச்சுக்கள் ஒன்றிணைந்து தைப்பொங்கலை மாகாணத்தின் ‘முதன்மைப் பெருவிழாவாக’ கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் யாழ் விஜயம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புச் செயற்றிட்டம் குறித்துப் பாராட்டிய ஆளுநர், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மாணவிகளின் கலை நிகழ்வுகளுடன் களைகட்டிய இந்நிழ்வில், கலாமன்றங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதில் மாகாண மற்றும் மாவட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!