ஆசியா

சிங்கப்பூரில் SIM அட்டைகள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கவுள்ள கடுமையான நடவடிக்கை

சிங்கப்பூரில் SIM அட்டைகளைக் குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதற்குப் புதிய சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகளை அரசாங்கம் தடுக்கிறது. அதைத் தவிர்ப்பதற்குக் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் சிங்கப்பூர் சிம் அட்டைகளைப் பயன்படுத்துகின்றன.

மூன்று பிரிவினரைப் புதிய மசோதா குறிவைக்கிறது. முதல் பிரிவினர், பொறுப்பில்லாமல் சிம் அட்டைகளுக்குப் பதிவு செய்பவர்கள். இரண்டாவது பிரிவினர், அவற்றைப் பெறுபவர்கள், வைத்திருப்பவர்கள், விநியோகிப்பவர்கள். மூன்றாவது பிரிவினர், கடைக்காரர்களாகும்.

சிம் அட்டைகளை பணம் வாங்கிக் கொண்டு அடுத்தவருக்குக் கொடுப்போர் அது குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்படும் என்று தனக்குத் தெரியாது என்று சொல்லித் தப்ப இடமுண்டு. புதிய சட்டம் நடப்புக்கு வந்ததும் அப்படித் தப்ப முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை, 10,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்