இலங்கை

இலங்கை – முப்படை வீரர்களின் உரிமைகள் குறைக்க தயாராகும் அரசு?

இலங்கை – முப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை குறைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துயகொண்டா தெரிவித்துள்ளார்.

“முப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை குறைக்கும் அரசாங்கத்தின் நோக்கம் குறித்து ஊடகங்களில் தவறான வதந்திகள் பரப்பப்படுவதாக நான் அறிந்தேன். எவ்வாறாயினும், முப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எந்த நேரத்திலும் குறைக்கும் எண்ணம் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்பதை நான் முறையாகப் பிரகடனப்படுத்துகிறேன்” என்று அவர் கூறினார்.

இலங்கை விமானப்படை (SLAF) தலைமையகத்திற்கு தனது முதல் விஜயத்தின் போது விமானப்படை வீரர்களிடம் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் விமானப்படை தலைமையகத்தின் பல பிரிவுகளுக்கு விஜயம் செய்தார்.

(Visited 1 times, 1 visits today)
See also  இலங்கை: பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சடலமாக மீட்பு!
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content