இலங்கை

ஜெர்மனிக்குள் நுழையும் இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டவர்களால் திணறும் அரசாங்கம்

ஜெர்மனி நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டவர்களின் தொகை அண்மை காலத்தில் அதிகரித்து வருவதாக புள்ளி விபரம் ஒன்று தெரிவித்து வருகின்றது.

ஜெர்மனி நாட்டுக்குள் நுழைய பல நாட்டு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெர்மன் நாட்டில் சட்ட விரோதமான முறையில் உள் நுழைய முயற்சித்தவர்களின் எண்ணிக்கையானது கடந்த மாதம் 40 சதவீதமாக உயர்ச்சியடைந்துள்ளதாக ஜெர்மனியின் எல்லை தடுப்பு பொலிஸார் தெரிவித்து இருக்கின்றார்கள்.

அதாவது கடந்த ஆவணி மாதம் மட்டும் இவ்வாறு 15000 பேர் சட்ட விரோதமான முறையில் ஜெர்மன் நாட்டுக்குள் நுழைய முயற்சித்ததாகவும்,

இந்நிலையில் கடந்த ஆடி மாதத்தில் இவ்வாறு 10714 பேர் சட்ட விரோதமான முறையில் ஜெர்மன் நாட்டுக்குள் நுழைய முனைந்ததாகவும் எல்லை தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!