அரசாங்க நிகழ்வுகள் இடைநிறுத்தம்: ‘புதன்’ விடுமுறை எதற்காக?
“ வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கினால் சனி, ஞாயிறு என மூன்று நாட்களுக்கு அரசாங்க நிர்வாகம் முடங்கக்கூடும்.
எனவேதான், உரிய மதிப்பீட்டின் பிரகாரம் புதன்கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.”
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போது போதே அதிகாரிகளால் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை அரசாங்கத்தால் நடத்தப்படும் நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் எரிபொருள் கையிருப்பு இருந்தாலும், எதிர்கால சூழ்நிலையைக் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய மேலதிக செய்தி…….
மத்திய கிழக்கு போர்ச்சூழல்: இலங்கையில் விசேட அரச விடுமுறை பிரகடனம்!





