இலங்கை செய்தி

மனைவியுடன் வெளிநாட்டிற்கு பறந்தார் கோட்டாபய ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகியோர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தில் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் உள்ள பௌத்த விகாரைகளை வழிபடுவதற்காக இவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பயணத்தை முடித்துக்கொண்டு எதிர்வரும் 10ம் திகதி அவர் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் விசேட போதி பூஜைகளும் நடத்தப்பட்டன.

இந்நிலையிலேயே, அவர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக, கடந்த ஆண்டு ஜூலை 9ம் திகதி அவர் நாட்டை விட்டு வெளியேறியதுடன் பதவியையும் இராஜினாமா செய்திருந்தார்.

 

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!