அறிவியல் & தொழில்நுட்பம்

ChatGPT-க்கு போட்டியாக 180 நாடுகளில் அறிமுகமான கூகிள் Bard

ChatGPT-க்கு போட்டியாக 180 நாடுகளில் கூகிள் Bard அறிமுகமாகியுள்ளது.

கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு செயலியான BARD-யை இந்தியா உட்பட 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது மென்பொருள் தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் நாம் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை அப்படியே தந்துவிடும் அம்சம் கொண்டது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட AI தான் இந்த கூகுள் பார்ட்(Bard).

Chat GPT-க்கு போட்டி:

முன்னதாக, சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI ஆல் உருவாக்கப்பட்ட ChatGPT என்ற AI அறிமுகமான சில வாரங்களிலேயே பத்து லட்சம் பயனர்களை ஈர்த்தது. தற்பொழுது, Chat GPT-க்கு போட்டியாக மீண்டும் AI-களுக்கான களத்தில் பார்ட் இறக்கிவிடப்பட்டுள்ளது.

180க்கும் மேற்பட்ட நாடுகளில் BARD:

ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பார்ட் முதலில் சோதனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டாலும், சிறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூகுள் அந்த கோளாறுகளை தற்போது சரிசெய்து பார்ட் AI-யை இந்தியா உட்பட 180க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

40 மொழிகளில் விரிவு:

பார்ட் ஆங்கிலம், ஜப்பானியம் மற்றும் கொரிய மொழிகளில் கிடைக்கிறது. மேலும், 40 மொழிகளில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு உரையை உருவாக்கலாம், அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கலாம். உங்கள் கேள்விகளுக்கு விரிவான மற்றும் தகவலறிந்த விதத்தில் பதிலளிக்கும் திறனையும் பெற்றுள்ளது. பார்ட் இன்னும் மேம்பாட்டில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு செயலியான BARD-யை இந்தியா உட்பட 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது மென்பொருள் தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் நாம் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை அப்படியே தந்துவிடும் அம்சம் கொண்டது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட AI தான் இந்த கூகுள் பார்ட் (Bard).

Chat GPT-க்கு போட்டி:

முன்னதாக, சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI ஆல் உருவாக்கப்பட்ட ChatGPT என்ற AI அறிமுகமான சில வாரங்களிலேயே பத்து லட்சம் பயனர்களை ஈர்த்தது. தற்பொழுது, Chat GPT-க்கு போட்டியாக மீண்டும் AI-களுக்கான களத்தில் பார்ட் இறக்கிவிடப்பட்டுள்ளது.

180க்கும் மேற்பட்ட நாடுகளில் BARD:

ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பார்ட் முதலில் சோதனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டாலும், சிறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூகுள் அந்த கோளாறுகளை தற்போது சரிசெய்து பார்ட் AI-யை இந்தியா உட்பட 180க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

40 மொழிகளில் விரிவு:

பார்ட் ஆங்கிலம், ஜப்பானியம் மற்றும் கொரிய மொழிகளில் கிடைக்கிறது. மேலும், 40 மொழிகளில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு உரையை உருவாக்கலாம், அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கலாம். உங்கள் கேள்விகளுக்கு விரிவான மற்றும் தகவலறிந்த விதத்தில் பதிலளிக்கும் திறனையும் பெற்றுள்ளது. பார்ட் இன்னும் மேம்பாட்டில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்