இலங்கை செய்தி

ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி

விசேட மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு இன்று (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அதன்படி 2024 செப்டெம்பர் மாதம் முதல் சம்பள முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை மாதாந்தம் விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் திரு.சுசில் பிரேமஜயந்த,

“அரசு சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக தனி குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அனைத்து துறைகளிலும் உள்ள சம்பள முரண்பாடுகளை ஒரேயடியாக தீர்க்க குழு நியமிக்கப்பட்டது.

இதற்கிடையில் குழுவின் கருத்துப்படி சம்பள முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை செப்டம்பர் மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு 3000 ரூபாய் கொடுப்பனவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!