ஆசியா இன்றைய முக்கிய செய்திகள்

சிங்கப்பூரில் அரசாங்க ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

சிங்கப்பூரில் அரசாங்க ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என மகிழ்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு 1.05 மாதம் ஆண்டிறுதி கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

MX15, MX16 அதிகாரிகளுக்கும், செயல்பாட்டு ஆதரவு திட்டத்தில் பணிபுரியும் இளம் அதிகாரிகளுக்கும் கூடுதலாக 600 வெள்ளி ஒருமுறைத் தொகை வழங்கப்படும் என்று அரச சேவைப் பிரிவு அறிவித்தது.

அரச துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்களோடு ஆலோசனை நடத்தியபின் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டின் நடுப்பகுதியில் கொடுத்த போனசையும் சேர்த்து இவ்வாண்டு அரசாங்க ஊழியர்கள் மொத்தம் ஒன்றரை மாதப் போனஸ் பெறுகின்றனர்.

இளநிலை அதிகாரிகளுக்கு ஜூன் மாதம் 250 வெள்ளி வழங்கப்பட்டது.

இப்போது கொடுக்கப்படும் 600 வெள்ளியோடு சேர்த்து அவர்களுக்குக் கூடுதலாக மொத்தம் 850 வெள்ளி வரை வழங்கப்படுகிறது.

அரசாங்க ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் பதின்மூன்றாவது மாதச் சம்பளம், இவ்வாண்டும் வழங்கப்படும்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்