ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – அடுத்த மாதம் அதிகரிக்கப்படும் ஊதியம்

ஜெர்மனியில் அடுத்த மாதம் முதல் பல ஊழியர்கள் அதிக சம்பளத்தை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

2025ஆம் ஆண்டில் இருந்து வரி மாற்றம் என்பது சிலருக்கு அவர்களின் கணக்குகளில் அதிக நிகர ஊதியம் இருக்கும் என்று அர்த்தமாகும்.

அதற்கமைய, ஜெர்மனியில் உள்ள நிறுவனங்களும் பல்வேறு துறைகளில் சம்பளத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், சம்பள அதிகரிப்பிற்கு சில பணியாளர்கள் புத்தாண்டு வரை காத்திருக்க வேண்டியதில்லை எனவும் சிலருக்கு, அவர்களின் வருமானம் நவம்பர் மாத தொடக்கத்தில் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

அரசாங்க துறையில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களின் ஊதியம் நவம்பர் மாதம் முதல் அதிகரிக்கும். ஆனால் மேலும் பல துறைகளில் உள்ள ஊழியர்களும் அதிக சம்பளத்தை எதிர்பார்க்கலாம்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!