இலங்கை

இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக கடத்தப்பட்ட தங்கம் : ஒருவர் கைது!

இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்ட தங்க பிஸ்கட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக இடம்பெற்று வரும் மோசடி தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கு கிட்டத்தட்ட 916 தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த அதிகாரிகள் சந்தேக நபருடன் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி இலங்கை நாணயத்தில் 11 கோடியை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 9 times, 2 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!