மத்திய கிழக்கு

டுபாயில் இதுவரை இல்லாதளவில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

டுபாயில் தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாதளவில் உச்சத்தை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டுபாயில் தங்கத்தின் விலை நேற்று பிற்பகல் ஒரு கிராமுக்கு 305 திர்ஹம்களைத் தாண்டி புதிய சாதனையை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டுபாய் ஜூவல்லரி குழுமத்தின் தரவுகளின்படி, நேற்று மதியம் 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 305.75 திர்ஹம்ஸாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 22K, 21K மற்றும் 18K ஆகியவையும் ஒரு கிராமுக்கு முறையே 283.25 திர்ஹம்ஸ், 274.0 திர்ஹம்ஸ் மற்றும் 235.0 திர்ஹம்ஸ் என விற்பனையாகி, இதுவரை இல்லாத விலையாக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உலகளவில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்புகளால், மாலை 4.10 மணியளவில், ஸ்பாட் தங்கம் (spot gold) அவுன்ஸ் ஒன்றுக்கு 0.86 சதவீதம் அதிகரித்து, 2,525.01 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விலை உயர்வு குறித்து நூர் கேபிட்டலின் தலைமை சந்தை மூலோபாய நிபுணர் முகம்மது ஹஷாத் கூறுகையில்,

“கடந்த வாரம் பங்குச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க மீள் எழுச்சியை கண்டுள்ளது, S&P 500 மற்றும் கனடியன் TSX ஆகியவை ஆகஸ்ட் 5ல் இருந்த குறைந்த அளவிலிருந்து முறையே 6.5 சதவீதம் மற்றும் 5 சதவீதம் உயர்ந்துள்ளன. இது முதன்மையாக இரண்டு முக்கிய காரணிகளால் உந்தப்பட்டதாகத் தோன்றுகிறது. அதுவும் குறிப்பாக அமெரிக்காவில் பணவீக்கத்தில் தொடர்ச்சியான மிதமான நிலை மற்றும் மீள்திறன்மிக்க பொருளாதார செயல்திறன்” என்று தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content