அறிவியல் & தொழில்நுட்பம்

புதிய வசதியை அறிமுகம் செய்த Gmail

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் மிக முக்கிய தொலைத்தொடர்பு சாதனங்களில் ஒன்றாக உள்ள ஜிமெயிலில் தற்போது இமோஜி ரியாக்சன்களை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

கேள்வியோ, பதிலோ அல்லது கருத்து பரிமாற்றமோ எதுவாக இருந்தாலும் பேசுவதற்கு மாற்றாக மெசேஜ் முறை அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு மெசேஜை டைப் செய்வதற்கு மாற்றாக ரியாக்சனை வெளிப்படுத்தும் படங்களை பயன்படுத்தும் முறையான இமோஜி பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற பல்வேறு வகையான சமூக ஊடகங்களில் டைப் செய்து கருத்தை வெளிப்படுத்துவதற்கு பதிலாக இமேஜ் அனுப்பி கருத்துக்களை வெளிப்படுத்தும் இமோஜி முறை அதிகம் பயனாளர்களை கவர்ந்துள்ளது.

இதனால் இமோஜி ரியாக்ஷன்கள் பல நூற்றுக்கணக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி சொல்ல வரும் கருத்துக்களை எளிதாக வெளிப்படுத்த முடிகிறது. மேலும் இவை மொழிகளைக் கடந்த பரிமாற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது.

இந்த நிலையில் ஜிமெயில் நிறுவனமும் இமேஜ் ரியாக்சன்களை பயன்படுத்த முடிவு செய்திருக்கிறது. ஒருவருக்கு ஜிமெயில் வழியாக இமோஜி ரியாக்சன் வேலை பயன்படுத்தி ரிப்ளை செய்ய முடியும். தற்போது இந்த முறை சில ஆண்ட்ராய்டு போன்களில் சோதனை முறையில் துவங்கப்பட்டுள்ளது. வரக்கூடிய காலங்களில் முழுமையாக இமோஜை பயன்படுத்தி ரிப்ளை செய்ய முடியும். மேலும் தற்போது ஒரு ரிப்ளை பதிவில் 50 இமோஜிகள் வரை பயன்படுத்த முடியும்.

ஜிமெயில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் முக்கிய தொலைத் தொடர்பு சாதனமாக இருக்கிறது. இந்த நிலையில் தகவல்களை பரிமாற்ற மொழி மிகப்பெரிய தடையாக இருந்து வரக்கூடிய நிலையில் இமோஜி முறை மொழிகளற்ற கருத்துப் பரிமாற்றத்திற்கான வழியை விரிவடைய செய்திருக்கிறது.

 

(Visited 11 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்

You cannot copy content of this page

Skip to content