இலங்கை செய்தி

இலங்கையில் காதலனின் மார்பில் கத்தியால் குத்தி கொன்ற காதலி

வெல்லவாய பிரதேசத்தில் காதலி மார்பில் குத்தியதில் பலத்த காயமடைந்த காதலன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

புதிய வேலைக்கான நேர்காணல் தொடர்பான வாக்குவாதத்தில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாவலப்பிட்டியைச் சேர்ந்த சுஜித் பிரதீப் குமார என்ற 31 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் திருமணமான ஒரு குழந்தையின் தந்தை எனவும், அவரது மனைவி வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான பெண் உயிரிழந்தவருடன் காதல் உறவில் இருந்ததாகவும், சந்தேக நபர் வெல்லவாய கொட்டவெஹெர பகுதியில் வாடகைக்கு விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் தனது காதலியின் விடுதி அறைக்கு பலமுறை சென்றிருப்பதும், சம்பவம் நடந்த நாளில், விடுதி அறைக்குச் சென்றிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதன்போது, ​​காதலி உயிரிழந்த இளைஞனிடம் புதிய வேலை ஒன்றிற்கு நேர்காணலுக்கு செல்லப்போவதாகக் கூறியதும் தெரியவந்துள்ளது.

(Visited 52 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை