இலங்கை செய்தி

இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி – இரத்தக் காயங்களுடன் சடலம் மீட்பு

முகத்தில் இரத்தக் காயங்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 16 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நிவித்திகல, வதபொத, யவ் கிராமத்தில் உள்ள இறப்பர் செய்கை நிலத்திற்கு அருகில் உள்ள நடைபாதையில் நேற்று சடலம் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார், இவர் அந்த பகுதியில் உள்ள கிராம பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இறந்தவரின் தாயார் வட்டபொட்ட கோவிலுக்கு அருகில் கடை நடத்தி வருவதோடு, சம்பவத்தன்று சிறுமி பாடசாலைக்கு செல்லாததால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமியை கடைக்கு வருமாறு தாய் தொலைபேசி அழைப்பொன்றை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடைக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டதால், கடையில் இருந்து தாய் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்த போது,தோட்டத்தில் வெட்டப்பட்ட இறப்பர் மரத்தின் கிளையின் மூலம் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

See also  இலங்கையில் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணிக்கும் பங்குச் சந்தை!

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content