கொலை செய்யப்பட்டு கழிவறை குழியில் வீசப்பட்ட சிறுமி : இலங்கையில் சம்பவம்!

இலங்கையில் 14 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு அவரது சடலம் கழிவறை குழியல் வீசப்பட்டுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த குறித்த சிறுமி, கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை தொடர்பில் தனது 02ஆவது கணவர் மீது சந்தேகம் இருப்பதாக பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவரை கைது செய்துள்ள பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியைக் கொன்று, நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டின் பின்புறமுள்ள கழிவறையில் சடலத்தை வைத்து கான்கிரீட் பலகையால் மூடியதை கண்டறிந்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், கம்பஹா நீதவான் நீதவான் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)