இலங்கை செய்தி

இலங்கையில் கடை ஒன்றில் தொலைபேசி திருடி சிக்கிய யுவதி – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தொலைபேசியைத் திருடிய யுவதியொருவர் ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு தம்புள்ளை நீதவான் சம்ருத் ஜஹான் உத்தரவிட்டதையடுத்தே அது இடம்பெற்றுள்ளது.

ஒரு தாய் மகளும் சிறுவனும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்துள்ளனர், அங்கு கவனமாக வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசியை மகள் திருடுவதும் தாய் மற்றொரு கையடக்கத் தொலைபேசியை திருடுவதும் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

கடையின் உரிமையாளர்கள் பாதுகாப்பு கமரா அமைப்பு மற்றும் தாயும் மகளும் எப்படி கடை உரிமையாளர்களுக்கு போனை கொடுத்தார்கள் என்ற வீடியோ காட்சிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

கையடக்கத் தொலைபேசி கடையின் உரிமையாளர் தம்புள்ளை பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், திருட்டைச் செய்த தாயும் மகளும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதுடன், குறித்த கையடக்கத் தொலைபேசியை இந்தக் கடையின் உரிமையாளர்கள் தம்புள்ளை பொலிஸாரிடம் வழங்கியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் தாய்க்கு எதிராக முறைப்பாட்டாளர் முறைப்பாடு செய்யாத காரணத்தினால் தாயை நீதிமன்றத்திற்கு அழைத்து வரவில்லை என தம்புள்ளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!