ஆசியா

வியட்நாமில் கரையொதுங்கிய இராட்சத மீன் : பாரிய அழிவு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள்!

இயற்கை பேரிடர்களை முன்னறிவிப்பதாக கூறப்படும் ஆழ்கடலில் மீன் ஒன்று கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த மீனை பார்த்து வியந்த மக்கள் பலர் அதனை புகைப்படம் எடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வியட்நாமில் உள்ள Huế நகருக்கு அருகே கடல் உயிரினம் கரையொதுங்கியுள்ளது. குறித்த மீனானது பாரிய இயற்கை பேரிடர்கள் ஏற்படுவதற்கு முன் இவ்வாறு கரையொதுங்குவது வழமையான நிகழ்வு என மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு துருப்பு மீனைப் பார்ப்பது இயற்கை பேரழிவுகளை, குறிப்பாக பூகம்பங்கள் மற்றும் சுனாமிகளைக் குறிக்கிறது என்பது மிகவும் பிரபலமான புராணங்களில் ஒன்றாகும் என உள்ளுர் வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த மீன் கடலில் உள்ள மிக நீளமான மீன்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன மற்றும் 55 அடி நீளம் மற்றும் 440 பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ளதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!