ஐரோப்பா செய்தி

யூரோவின் தோல் நிறக் கருத்துக்களுக்கு மன்னிப்பு கோரிய ஜேர்மனியின் மூத்த அரசியல்வாதி

ஜேர்மனியின் மூத்த அரசியல்வாதி ஒருவர், அந்நாட்டு கால்பந்து அணியின் உறுப்பினர்களில் வெள்ளை நிற வீரர்கள் மட்டும் இருந்தால் எப்படி இருக்கும் எனக் கேட்டதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஜேர்மன் கூட்டாட்சி நாடாளுமன்றத்தின் துணைத் தலைவரான கிரீன் எம்.பி கத்ரின் கோரிங்-எக்கார்ட் இந்த சர்ச்சையை எதிர்கொண்டுள்ளார்.

யூரோ 2024 போட்டியில் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை தோற்கடித்த பிறகு, “இந்த அணி உண்மையிலேயே விதிவிலக்கானது. வெள்ளை நிற ஜேர்மன் வீரர்கள் மட்டும் இருந்தால் கற்பனை செய்து பாருங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

அத்தோடு மூன்று ரெயின்போ எமோஜிகளையும் சேர்த்திருந்தார்.

பின்னர் சக எம்.பி.க்கள் உட்பட சமூக ஊடகங்களில் கண்டனத்திற்குப் பிறகு, Ms Göring-Eckardt அந்த இடுகையை நீக்கிவிட்டு, அது சொல்லப்பட்ட விதத்திற்காக மன்னிப்பு கோரினர்.

(Visited 20 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி