ஐரோப்பா

ஜெர்மனியில் அதிகரிக்கும் உதவித் தொகை – வெளியான மகிழ்ச்சி தகவல்

ஜெர்மனியில் தமிழர்கள் உட்பட உதவித் தொகை பெரும் அனைவருக்கும் மகிழ்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் 2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து குழந்தைகளுக்கான பராமரிப்பு பணத்தினுடைய அளவுகள் அதிகரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் டிஸில்டோஃவெட் டபேல் என்று சொல்லப்படுகின்ற இந்த புதிய திட்டத்தின் அடிப்படையில் 6 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு அதாவது தனி நபருக்கு இதுவரை காலமும் 437 யுரோ பராமரிப்பு பணமாக வழங்கப்பட்டு இருந்தது.

ஆனால் 2024 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த பராமரிப்பு பணமானது 480 ஆக உயர்வரைகின்றது. 6 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு எதிர் வரும் காலங்களில் 551 யூரோ வழங்கப்படும்.

12 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு 681 யூரோக்களாக உயர்வடைகின்றது. இந்நிலையில் பல்கலைகழகங்களில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு இவ்வாறு பராமரிப்பு பணமானது 930 யூரோவாக உயர்வடைவதாக தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!