லிதுவேனியாவிற்கு நிரந்தரப் படைகளை அனுப்பும் ஜெர்மனி

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (நேட்டோ) கிழக்குப் பகுதியைப் பாதுகாக்க உதவும் வகையில் பெர்லினின் படைப்பிரிவைத் திறந்து வைப்பதற்காக ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் இந்த வாரம் லிதுவேனியாவுக்கு விஜயம் செய்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனியிலிருந்து நிரந்தர வெளிநாட்டுப் படைகள் அனுப்பப்படுவது இதுவாகும்.
தனது விஜயத்தில் மெர்ஸுடன் ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸும் இணைந்தார். இந்த விழா அதிகாரப்பூர்வமாக ஒரு கவசப் படைப்பிரிவை உருவாக்கியதைக் குறித்தது.
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததற்கு மத்தியில், பால்டிக் நட்பு நாடுகளின் பாதுகாப்பும் “எங்கள் பாதுகாப்பு” என்று மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவிற்கு எதிராக ஐரோப்பிய பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகளை விரிவுபடுத்துமாறு அவர் நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். அதன் இராணுவத்தை வலுப்படுத்துவதன் மூலம், பாதுகாப்பில் மேலும் முதலீடு செய்யுமாறு பெர்லின் நட்பு நாடுகளுக்கு சமிக்ஞை செய்துள்ளது என்று மெர்ஸ் குறிப்பிட்டுளளார்.