இந்தியா

இந்தியர்களுக்கான வேலை விசாக்களை அதிகரிக்கும் ஜெர்மனி

இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு சென்றிருந்த ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பல திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், இந்தியர்களுக்கான வேலை விசாக்களை அதிகரிப்பதாக ஜெர்மானிய அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆண்டுக்கு 20,000 விசா என்றிருந்த அந்த எண்ணிக்கை இனி 90,000ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“திறமையானவர்களுக்கு ஜெர்மனியின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்,” என்று திரு ஓலாஃப் ஷோல்ஸ் குறிப்பிட்டார்.

ஜெர்மனியின் விசா அதிகரிப்பு இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரும் முன்னேற்றமாக இருக்கும் என்று இந்தியப் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவும் ஜெர்மனியும் மாணவர்கள், வேலை வாய்ப்பு குடியேற்றம் தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

கடந்த ஓர் ஆண்டில் மட்டும் மூன்றுமுறை ஜெர்மன் பிரதமர் இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். இது இரு நாடுகளுக்கு இடையிலான நட்பை வலுப்படுத்தியுள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

(Visited 34 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே