ஜார்ஜியா பள்ளி துப்பாக்கி சூடு – துப்பாக்கிதாரி குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவின் ஜார்ஜியா பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 14 வயது மாணவர் என்றும், கொல்லப்பட்ட நான்கு பேரில் இருவர் சக மாணவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“இறந்தவர்களில், இருவர் மாணவர்கள் மற்றும் இருவர் பள்ளி ஆசிரியர்கள்” என்று ஜார்ஜியா புலனாய்வு பணியகத்தின் இயக்குனர் கிறிஸ் ஹோசி தெரிவித்துள்ளார்.
“துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காவலில் இருக்கிறார், அவர் ஜார்ஜியா பள்ளியில் பயிலும் பதினான்கு வயது மாணவர்” என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
(Visited 57 times, 1 visits today)





