இலங்கை

இலங்கை: 2025 சாதாரதரப் பரீட்சை! கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள இரண்டு முக்கிய அறிவிப்புக்கள்

அண்மைய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை செப்டெம்பர் மாதம் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ​​2025 O/L பரீட்சைகள் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பிடிபன களஞ்சியசாலையில் பாடநூல் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் உயர்தர மற்றும் ஏனைய பரீட்சைகளை முன்னதாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பரீட்சை கால அட்டவணையை புதுப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் O/L, A/L மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அண்மைய க.பொ.த சா/த பரீட்சைக்கு பின்னர் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட உயர்தர வகுப்புகளுக்கான கற்கைகள் தற்போது வெற்றிகரமாக முன்னேறி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

(Visited 112 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்